follow

follow

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Tuesday 23 December 2014

பார்வை


நீ உயர்ந்து மேலே செல்லச் செல்ல, இன்னும் கீழேயே இருப்பவர்களுக்கு நீ சிறியவனாய்த் தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை. அதனால், அவர்கள் உன் முயற்சிகளைப் பற்றி எள்ளி நகையாடினால், கண்டு கொள்ளாதே.


உன் முயற்சிகளை ஏளனம் செய்வோரிடமிருந்து விலகியே இரு. சிறியோரே அவ்வாறு செய்வர்; மாறாக, உண்மையான பெரியோரோ உன்னாலும் முடியும் என்று உன்னை உணர வைப்பர்.
- Mark Twain.

சராசரி மனிதனின் விமர்சனம், உன் நோக்கத்தைத் திசை திருப்ப அனுமதிக்காதே. நீ கனவு கண்டால், அவன் உன்னைப் பைத்தியக்காரன் என்பான்; நீ வெற்றி பெற்றால், நீ அதிர்ஷ்டசாலி என்பான்; நீ செல்வந்தன் ஆனாலோ, உன்னைப் பேராசைக்காரன் என்பான். அவனைக் கண்டுகொள்ளாதே. அவனால் உன்னை எப்போதுமே புரிந்துகொள்ள முடியாது.
- Robert Allen.


நியாயமில்லாத விமர்சனம்கூட ஒரு விதத்தில் பாராட்டேயாகும். நீ ஒருவரின் பொறாமையைத் தூண்டிவிட்டாய் என்பதையே இது காட்டுகிறது.
- Dale Carnegie

கல்லூரியில் ஒரு நாள்....!!!!


கல்லூரி வாழ்க்கை முடிந்து மீண்டும் கல்லூரிக்கு ஒரு நாள் சென்று வந்தேன்.
கல்லூரியில் பல மாற்றங்கள்.
முதல் மாறுதல் மாணவனாய் சென்ற நான் பழைய மாணவனாய் அறிமுகம் செய்து கொண்டு உள்ளே சென்றேன்.
கல்லூரியின் கொரிடோக்களில் நடந்து செல்ல கல்லூரி நாட்கள் என்னைப் பின்னோக்கி அழைத்தன.
அதே கொரிடோக்களில் நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்தது; சண்டையிட்டது; மற்ற வகுப்பு சகோதரிகளை கிண்டலடித்தது என பல ஞாபகங்கள் என்னுள்.
தனிமை உணர்ந்ததில்லை; நான் அன்று உணர்ந்தேன் என் நண்பர்களில்லாத என் கல்லூரியில் நான் மட்டும் தனியாய் நடந்த போது.
அதிக வெயிலினால் ஒரு சில தாகம் வரும் போது அங்கிள் சமையலுக்காக வைத்திருக்கும் தேசிக்காய்களில் ஒன்றை எடுத்து 6 பேர் பிழிந்து குடிக்கும் போது கண்ட சந்தோசம் கல்லூரியிலுள்ள ஒரு சகோதரி சுவையான பானத்தை என் முன்னே வந்து நீட்டும் போது உணரவில்லை.
என் கண்கள் தேடிச் சென்றது எங்களது அறையை.
என்னை வரவேற்று கண்ணீர் சிந்துவது போல் உணர்ந்தேன்.
நாம் விடுகை வருடத்தில் ஒன்றாய்க் கழித்த எம் அறையைப் பார்த்த போது மௌனமொழி பேசி என் இருப்பிடம் என்னைக் கேட்டது "நீ மட்டும் தான் வந்தாயா?" என்று.
இதயம் கனத்தது.
என்னையறியாமல் ஒரு வலி என்னுள் தோன்ற என் சந்தோசத்தை மட்டுமே பார்த்த என் இருப்பிடம் என் சோகத்தையும் பார்த்தது.
கலங்கியது கண்கள்.
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மெல்ல நடந்தேன் உணவறையை நோக்கி.
வீட்டால் எவரேனும் கொண்டுவரும் ஒரு உணவுப்பொதியை 30 கைகள் போட்டு, செல்லச் சண்டையிட்டு, கை எட்டாதவர்களுக்கு ஊட்டிவிடும் போது உள்ள சுகம் தனியாளாய் மேசையில் அமர்ந்து சாப்பிடும் போது அன்று கிடைக்கவில்லை.
பகல் நேர சாப்பாடு உரைப்பில்லாத போது யாரும் காணாதவாறு நாமாகவே உப்பு, புளி போட்டு ஒரு சம்பலை செய்து கொண்டு சுவைத்த சுவை அன்று பல சுவைகளுடனும் உண்ட உணவில் நான் அனுபவிக்கவில்லை.
மஸ்ஜித் கொரிடோக்கள், எமக்கேயுரிய சிறு விளையாட்டுத் திடல், புந்தோட்டம் என நாங்கள் கழித்த இடங்களில் நான் மற்றும் நின்று சற்று நேரம் மீண்டும் கல்லூரி நாட்களில் வாழ்ந்து பார்த்தேன்.
ஈமானிய நட்பு உருவான தருணம், ஈமானிய உறவுகளுடன் வாழ்ந்த தருணம் என என் நினைவுகள் என் நிழலாய் வந்தது.
தொலைபேசியை எடுத்து என் நண்பர்கள் அனைவருக்கும் தகவல் அனுப்பினேன் நான் கல்லூரியில் இருக்கிறேன் என்று.
அனைவரும் ரிப்லை செய்து நாங்கள் வாழ்ந்த நாட்களை நினைவுபடுத்திக் கொண்டனர் என்னோடு.
நான் ஆயிஷாவில் நுழைந்த ஆரம்ப காலங்களில் எமது மூத்த சகோதரிகள் எம்மைப் பார்த்து "இரத்த உறவை விட ஈமானிய உறவு பலமானது" என்ற மகுடத்தை உணர்த்துபவர்களாக இருந்தார்கள்.
அப்போது, "என்ன????? இரத்த உறவை விட ஈமானிய உறவு பலமானதா?? எங்கோ இருந்து வந்து சிறிது காலம் அடைக்கலமான இவர்கள் இரத்த உறவுகளுக்கு சமனாகக் கூட முடியாது" என்று அன்று அலுத்துக் கொண்டேன். ஆனால், காலம் செல்லச் செல்ல "ஆம், இரத்த உறவை விட ஈமானிய உறவு பலமானது" என்பதை நானே உள்ளத்தளவில் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு இக்கல்லூரி என்னைப் புடம் போட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
நான் கிளம்பும் நேரம் கல்லூரியை ஏற இறங்கப் பார்த்து விட்டு பெருமூச்சு விட்டுத் திரும்பி நடந்தேன்.
என் உடல் மட்டுமே திரும்பி நடந்தது. என் நினைவுகள் அனைத்துமே என் கல்லூரியை சுற்றித்திரிந்த படி!
மீண்டும் கிடைக்காத நிமிடங்கள் கல்லூரி வாழ்க்கையில் மட்டுமே!
அப்போது எனது ஆசிரியர் எப்போதும் நினைவுபடுத்தும் ஒரு வாசகம் என் நினைவைத் தட்டியது.
"لا ثعرف النعم الا بعد زوالها"
"ஒன்றை இழந்த பின்பே அதன் அருமையை உணர்வாய்"
என் ஈமானிய உறவுகளே!!!
நேரம் கிடைத்தால் நீங்களும் சென்றுவாருங்கள் அவரவர் கல்லூரிகளுக்கு.
நீங்கள் சந்தோசமாக இருந்த நாட்களை நினைவுபடுத்தி வாருங்கள்.
பல்வேறு இடங்களை சேர்ந்த மாணவர்களை ஒன்று சேர்க்கும் கல்லூரிகளுக்கும், நட்போடு பழகும் ஆசிரியப் பெருமக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!!

Post Copy Facebook...

Friday 19 December 2014

கல்வி



எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும். -சாக்ரடீஸ்.

ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன் ஒரு சிறைச்சாலையை மூடுகிறான். -விக்டர் ஹியூகோ.

கல்வியின் வேர்களோ கசப்பானவை; ஆனால் கனியோ இனிப்பானது. -அரிஸ்டாட்டில்

நமது நண்பர்களுக்குக் கற்றுக் கொடுக்க முயற்சிப்பதைவிட நமது எதிரிகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்வதே மேல்! -சார்ல்ஸ் கால்டன்.

என்னிடம் 6 நாணயமான நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள்தான் எனக்கு எல்லாம் கற்றுத் தருகின்றனர். அவர்களுடைய பெயர்கள்: எங்கே?, என்ன?, எப்போது?, ஏன்?, எப்படி?, யார்? -ருட்யார்ட் கிப்ளிங்.

நட்பு


உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

பெருமைக்காரன் கடவுளை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான்.

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம். எல்லாருக்கும் நண்பனாயிருப்பவன், யாருக்கும் நண்பனல்ல

நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது.

நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்.

Thursday 18 December 2014

வெற்றி-தோல்வி


நீ பிறந்தது வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கே; தோல்வியுற அல்ல. அப்படியே உன்னைத் தோல்வி வந்து அணைத்தாலும், அந்தத் தோல்வியும் ஒரு தற்காலிகத் தடையே. உனது தன்னம்பிக்கையே அந்தத் தடைகளைத் தகர்த்தெறியும்.

உன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது.

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்லவிழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

எந்தத் துறையையும் சார்ந்த, ஒவ்வொரு வெற்றியாளரும், சாதனையாளரும் இந்த வர்த்தைகளில் பொதிந்திருக்கும் மந்திரத்தை அறிந்திருப்பார்கள்: "வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு இடர்பாட்டிலும், மிகப் பெரிய அநுகூலத்திற்கான விதை ஒளிந்திருக்கிறது."
 W. Clement Stone

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
அடால்ஃப் ஹிட்லர்

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன. 
Albert Einstein

எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று நினைக்கும் போது, ஒன்றை மறக்காதீர்கள்.எதிர்காலம் என்ற ஒன்று உண்டு
கிளப்டைன்

இரவு எனும் காராக்கிரகம் நம்மைச் சூழ்ந்திடும்போதெல்லாம், காலைப் பகலவனின் அற்புத வெளிச்சம் நம்மை நெருங்கிவிட்டது என்பதே அர்த்தம்!' 
நேதாஜி

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.  
சுவாமி விவேகானந்தர்

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள். - பான்னி ப்ளேயர் எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

கீழான லட்சியத்தில் வெற்றி காண்பதை விட, உயர்ந்த லட்சியத்தில் தோல்வி காண்பது சிறந்தது
பிரவுனிங்

கீழே விழாமல் இருப்பதில் பெருமையில்லை. விழுந்த பொழுதெல்லாம் எழுந்திருப்பதே பெருமை!
ஹ்யூம் 

துக்கத்தால் தற்கொலை செய்து கொள்பவன் தைரியசாலி என்றால், அந்தத் துக்கத்தைத் தாங்கிக் கொள்கிறவனோ பெரும் வீரன்
மாஸிங்கர்

வாழ்க்கை


என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா கில்லாடி. கொடிய காட்டுமிருகங்களைக் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள்.

''தாத்தா... கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா?‘‘ என்று சிறுவனாக இருந்த நான் அவரிடம் ஒரு முறை கேட்டேன்.

''அடே பையா... வேட்டைக்குப் போவதே அந்த த்ரில்லுக்காகத்தானே!'' சிரித்தார் தாத்தா.

ஆமாம். வேட்டைக்குப் போவதென்பது அவருக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது. காடு என்பது பயங்கரமான பிரதேசம். எந்தப் புதரிலிருந்து எந்தக் காட்டுமிருகம் பாயுமோ... எதுவுமே தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடப் போவது திகிலான விஷயம். என்றாலும், ஏன் வேட்டையாடப் போகிறார்கள்?

எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதுமே ஓர் அலாதியான இன்பம். மகாராஜா தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ, சிங்கத்தையோ பிடித்து வந்து மரத்தில் கட்டி வைக்கச் சொல்லி அதை அம்பு எய்து கொல்லமுடியும். ஆனால், அதில் என்ன பெரிய சந்தோஷமோ, த்ரில்லோ இருக்கிறது? எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையில் இருந்து வரும் தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில்தானே முழுமையான சந்தோஷ மும் திருப்தியும் கிடைக்கும்?

அப்படிப் பார்த்தால் நம் வாழ்க்கையும் ஒரு மாய வேட்டைதானே? எதிர்பாராத நபர்களிட மிருந்து எதிர்பாராத நேரத்தில் சோதனைகள், நெருக்கடிகள் வரும். தாக்குதல்கள் வரும். அதை எதிர்கொள்வதில்தான் சந்தோஷம் இருக்கிறது. 'ஐயோ.. என் ஆருயிர் நண்பன் இப்படி என்னை ஏமாற்று வான் என்று கனவிலும் நினைக்கவில்லையே! செழிப்பாக ஓடும் என்று நினைத்துத் தொடங்கிய வியாபாரம் இப்படி ஒரேயடியாகப் படுத்துவிட்டதே!‘ என்றெல்லாம் வருத்தப்பட்டுப் புலம்புவதில் அர்த்தம் இல்லை.

வேட்டைக்குப் போகும் யாரும் ''இந்தப் புலி நான் ஏமாந்த நேரம் பார்த்து என் மீது பாய்ந்துவிட்டது. இது நீதியில்லை'‘என்று புலம்பியதுண்டா?

வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள். போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகமும் கிடைக்கும். ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்!

- சுவாமி சுகபோதானந்தா.